தாய்லாந்தின் அதிகரிக்கும் எதிர்ப்பு போராட்டம்.
சில எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மன்னர் மகா வஜிரலோங்கொர்னின் முடியாட்சி அரசியலை சீர்திருத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர்.
2019 மார்ச் இல் இடம்பெற்ற தேர்தலுக்குப் பின்னர் பிரயுத் பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து அரசியலமைப்பு நீதிமன்றம் தேர்தல் சட்டத்தை மீறியதாகக் கூறி, எதிர்க்கட்சித் தலைவரான தனதோர்ன் ஜுவாங்ரூங்ருவாங்கிட்டை நாடாளுமன்ற உறுப்பினராக தகுதி நீக்கம் செய்தது.
தனதோர்னின் தகுதிநீக்கம் மற்றும் அவரது எதிர்கால முன்னோக்கி கட்சியை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை எதிர்த்து பல ஆயிரம் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் பாங்கொக்கில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனை அடுத்து பெப்ரவரி 21 அரசியலமைப்பு நீதிமன்றம் விதித்த தடையை அடுத்து மறுதினம் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்தொடர்ந்து மார்ச் 26 இல் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, கூட்டங்கள் மற்றும் பயணங்களைக் கட்டுப்படுத்த தாய்லாந்து அதிகாரிகள் அவசரகால நிலையை அறிவித்தனர்.
இருப்பினும் ஜூலை 18 இல் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து அதாவது பாராளுமன்றத்தை கலைத்தல், அரசியலமைப்பை திருத்துதல் மற்றும் விமர்சகர்களை துன்புறுத்துவதை நிறுத்துதல் உட்பட கோரிக்கைகளுடன் பாங்கொக்கில் போராட சுமார் 2,500 பேருக்கு இளைஞர் குழு அழைப்பு விடுத்தது.
இதனை அடுத்து பாங்கொக்கின் ஜனநாயக நினைவுச்சின்னத்தில் 10,000 க்கும் மேற்பட்டோர் ஓகஸ்ட் 16 இல் இடம்பெற்ற போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த போராட்டம் மேலும் வலுப்பெற 2014 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் நடந்த மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
செப்டம்பர் 19 ல் முடியாட்சியில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் பிரயுத்தை அகற்ற வேண்டும் என்றும் கோஷம் எழுப்பி தொடர்ந்தும் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
.
.
தாய்லாந்தின் அதிகரிக்கும் எதிர்ப்பு போராட்டம்.
Reviewed by Author
on
September 20, 2020
Rating:

No comments:
Post a Comment