சர்வதேச தபால் தினத்தை முன்னிட்டு மன்னாரில் விளையாட்டு நிகழ்வு
அஞ்சல் அலுவலக பிரிவுக்குட்பட்ட தபாலகங்களில் கடைமையாற்றும் ஊழியர்கள் உத்தியோகஸ்தர்களின் பங்குபற்றுதலுடன் இடம் பெற்ற குறித்த விளையாட்டுக்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் திரு.ரெட்ன நாயக்க மற்றும் சிறப்பு விருந்தினராக மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் ரெஜினோல்ட் கலந்து சிறப்பித்தனர்
அதே நேரத்தில் கெளரவ விருந்தினராக சாவச்சேரி தாபால் அதிபர் இன்பராஜ் லெம்பேர்ட் மற்றும் யாழ்பாண தாபால் நிலைய காசாளர் - திரு-ஜெரோபா நானாட்டான் பிரதேச சபை உறுப்பினரும் திடீர் மரணவிசாரணை அதிகாரியுமான ரொஜன் ஸாரிலும் கலந்து கொண்டனர்
குறித்த நிகழ்வின் இறுதியில் நடைபெற்ற அணைத்து போட்டிகளிலும் வெற்றியீட்டிய அணிகளுக்கு வெற்றிகிண்னங்கள் வழங்கப்பட்டதுடன் சர்வதேச அஞ்சல் தினத்தையிட்டி வருகின்ற 8 ஆம் திகதி மன்னார் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சல் ஊழியர்கள் உத்தியோகஸ்தர்கள் இரத்ததானம் வழங்கவுள்ளமை குறிப்பிடதக்கது
சர்வதேச தபால் தினத்தை முன்னிட்டு மன்னாரில் விளையாட்டு நிகழ்வு
Reviewed by Author
on
October 04, 2020
Rating:

No comments:
Post a Comment