அண்மைய செய்திகள்

recent
-

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத பஸ்களின் அனுமதி இரத்தாகும்!

பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் போது சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய செயற்படுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். முகக்கவசமில்லாத பயணிகளை பஸ்களில் ஏற்ற வேண்டாம் என அனைத்து பஸ் ஊழியர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

 இதேவேளை, சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றாத பஸ்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, பஸ்களில் கிருமி ஒழிப்பினை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கொமாண்டர் நிலான் மிரண்டா கூறியுள்ளார்.

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத பஸ்களின் அனுமதி இரத்தாகும்! Reviewed by Author on October 06, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.