2019ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான வெட்டுப் புள்ளி தயாரிக்கும் பணிகள் நிறைவு
கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெற்ற நிலையில் வெட்டுப் புள்ளிகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கு மாணவர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் நிலைமை காரணமாகவே வெட்டுப் புள்ளிகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க கூறியுள்ளார்.
தற்போது க.பொ.த உயர்தர பரீட்சைகள் இடம்பெற்று வருவதால் வெட்டுப் புள்ளிகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
2019ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான வெட்டுப் புள்ளி தயாரிக்கும் பணிகள் நிறைவு
Reviewed by Author
on
October 15, 2020
Rating:

No comments:
Post a Comment