மாடுகளில் பரவும் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கமாறு கோரிக்கை
உள்ளூர் மாடுகளை விட கலப்பின மாடுகளையே இந்த நோய் அதிகம் தாக்குவதாக பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.
வட மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர், வைத்திய கலாநிதி எஸ்.வசீகரனிடம் இது குறித்து நாம் வினவியபோது, ஆபிரிக்க நாடுகளிலும் இந்தியாவிலும் கால்நடைகளில் பரவிய வைரஸே இதுவென கூறினார்.
எருமைகள் மற்றும் மாடுகளிடையே மாத்திரமே இந்த வைரஸ் பரவும் என்பதுடன், மனிதர்கள் அல்லது வேறு விலங்குகளுக்கு பரவாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நோய்வாய்ப்பட்ட மாடுகளை தனிமைப்படுத்துவதன் மூலம் நோய் பரவுவதை தடுக்க முடியும் எனவும் வட மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் கூறினார்.
இந்த வைரஸூக்கு இதுவரை மருந்துகள் இல்லை என்பதுடன், சில நாட்களில் தானாகவே மறைந்துவிடக் கூடியது எனவும், வட மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் மேலும் குறிப்பிட்டார்.
மாடுகளில் பரவும் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கமாறு கோரிக்கை
Reviewed by Author
on
December 14, 2020
Rating:

No comments:
Post a Comment