வெங்காயம் எனும் போர்வையில் ரூ. 2 கோடி பெறுமதியான மஞ்சள் கடத்தல்
புறக்கோட்டையில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவரினால் துபாயில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குறித்த 4 கொள்கலன்களை கைப்பற்றியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்டுள்ள 25,450 கி.கி. மஞ்சளின் பெறுமதி ஒரு கோடி 90 இலட்சத்து 87 ஆயிரத்து 500 ரூபா (ரூ. 19,087,500) என மதிப்பிடப்பட்டுள்ளது.இதற்கான சுங்க வரிகள் உள்ளிட்ட ஏனைய வரிகளாக, ரூ. 25 இலட்சத்து 95 ஆயிரம் செலுத்த வேண்டும் எனவும், ஆயினும் பெரிய வெங்காயம் எனும் போர்வையில் மேற்கொண்ட இறக்குமதிக்கு அமைய, சுங்க வரிகள் உள்ளிட்ட ஏனைய வரிகளாக, ரூ. 26,880 மாத்திரம் செலுத்தப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் வரிகளுடனான அதன் மொத்தப் பெறுமதரி ரூ. 2 கோடிக்கும் அதிகம் (ரூ. 21,682,500) என மதிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில், பெரிய வெங்காயத்தின் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரி, 25 சதமாக குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாக, பெரிய வெங்காயம் எனும் போர்வையில் வெவ்வேறு பொருட்கள் இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும், அது தொடர்பில் சுங்கத் திணைக்களம் மிகவும் அவதானமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாட்டிற்குள் மஞ்சள் இறக்குமதியும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதனையும் அவர் சுட்டிக்காட்டினார்இதேவேளை, இந்தியாவில் இருந்து கடல் வழியாக கொண்டு வரப்பட்ட மேலும் 700 கிலோகிராம் மஞ்சளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட கூட்டு சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இவ்வாறு மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
வெங்காயம் எனும் போர்வையில் ரூ. 2 கோடி பெறுமதியான மஞ்சள் கடத்தல்
Reviewed by Author
on
December 14, 2020
Rating:

No comments:
Post a Comment