யாழ்.மாவட்ட முடக்க நிலை தொடர்பில் அரச அதிபர் வெளியிட்டுள்ள கருத்து!
யாழ்.மாவட்டத்தின் தற்போதய நிலை குறித்து இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்திற்கு பிறகு 59 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இதில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
யாழ்.மாவட்டத்தில் ஏற்கனவே 744 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் சுமார் 400 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் தற்போது மொத்தமாக 1144 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்ட 26 தொற்றாளர்களும் மாவட்டத்தில் பரவலாக காணப்படுவதனால், ஒரு பிரதேசத்தை மாத்திரம் முடக்கி பயனில்லை என்பதனாலே உடுவில் பிரதேச முடக்கம் தளர்ப்பட்டுள்ளது.
ஆனால் மருதனார்மடம் சந்தை மற்றும் அதனோடு அருகிலுள்ள கடை தொகுதிகள் மறுஅறிவித்தல் வரை தொடர்ந்தும் மூடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட முடக்க நிலை தொடர்பில் அரச அதிபர் வெளியிட்டுள்ள கருத்து!
Reviewed by Author
on
December 14, 2020
Rating:

No comments:
Post a Comment