அண்மைய செய்திகள்

recent
-

கண் பிரச்சினைக்காக சிகிச்சை பெறும் மாணவர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு!

கண் பிரச்சினைக்காக சிகிச்சை பெறும் மாணவர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மாத்தறை பொது மருத்துவமனையின் கண் நோய்ப்பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் பிரியங்க இத்தவெல இதனைத் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுநோய் காரணமாக இணையம் ஊடாக கல்வியில் அதிக கவனம் செலுத்துவதால், பார்வை கோளாறுகளால் பாதிக்கப்பட்ட இருபது முதல் முப்பது மாணவர்கள் சிகிச்சைகளுக்காக வருகை தருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக வாந்தி, தலைச்சுற்றல், கண் வலி மற்றும் கண்ணீர் போன்ற அறிகுறிகளைக் கொண்ட மாணவர்களே அதிகம் சிகிச்சைகளுக்காக தன்னிடம் வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 

 எனவே, பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கணினி அல்லது தொலைபேசியின் திரையினை தொடர்ந்து பார்க்க வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் குறைந்தது 20 வினாடிகள் இடைவெளி எடுக்க வேண்டும் எனவும், ஏனைய வழிகாட்டல்களை பின்பற்றுமாறும் அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

கண் பிரச்சினைக்காக சிகிச்சை பெறும் மாணவர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு! Reviewed by Author on December 19, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.