மன்னார் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பீ.சி.ஆர் பரிசோதனை முன்னெடுப்பு
கடந்த வாரம் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் போது கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களோடு தொடர்புகளை கொண்டிருந்த நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.
அந்த அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கும் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை ஊழியர்களுக்குமான பீ.சி.ஆர். பரிசோதனைகள் இன்றைய தினம் புதன் கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில் 4 நபர்கள் மாத்திரமே நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் வசிப்பவராக கருதப்படுகின்றனர். ஏனையவர்கள் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் சுமார் 108 நபர்களுக்கு இன்றைய தினம் பீ.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
-மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 232 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பீ.சி.ஆர் பரிசோதனை முன்னெடுப்பு
Reviewed by Author
on
February 17, 2021
Rating:
Reviewed by Author
on
February 17, 2021
Rating:








No comments:
Post a Comment