மன்னார் மாவட்டம் முழுமையாக முடங்கியது-பொலிஸ்,இராணுவம் விசேட பாதுகாப்புக் கடமையில்.
மன்னார் நகரில் பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் மாத்திரம் நடமாட அனுமதி வழங்கியுள்ளனர்.
மேலும் வீதிகளில் நடமாடுபவர்களை இராணுவம் மற்றும் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு தேவை இன்றி நடமாடுபவர்களை எச்சரித்து அனுப்புகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன்,அரச தனியார் போக்கு வரத்துக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தனியார் மருத்துவ மனைகள் திறக்கப்பட்டுள்ளது.எனினும் மன்னார் மாவட்டம் மக்களின் நடமாட்டம் இன்றி இன்றைய தினம் சனிக்கிழமை (22) முழுமையாக முடங்கியுள்ளது.
மேலும் மன்னார் நகர பேரூந்து நிலையத்தை தூய்மையாக்கி கிருமி நீக்கும் நடவடிக்கைகளில் மன்னார் நகர சபை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதது.
மன்னார் மாவட்டம் முழுமையாக முடங்கியது-பொலிஸ்,இராணுவம் விசேட பாதுகாப்புக் கடமையில்.
Reviewed by Author
on
May 22, 2021
Rating:

No comments:
Post a Comment