அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா மாவட்ட புதிய அரசாங்க அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்!

வவுனியா மாவட்ட புதிய அரசாங்க அதிபராக பௌத்தசாசன அமைச்சில் உயர் அதிகாரியாக பணியாற்றிய பி.ஏ. சரத்சந்திர, தனது கடமைகளை நேற்று (வெள்ளிக்கிழமை) பொறுப்பேற்றார். வவுனியா அரச அதிபராக கடமையாற்றிய சமன் பந்துலசேன, வட.மாகாண பிரதம செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். 

 இதனைத் தொடர்ந்து, கடந்த ஒரு மாதகாலமாக மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய தி.திரேஸ்குமார், பதில் அரசாங்க அதிபராக தனது பொறுப்புக்களை மேற்கொண்டிருந்தார். இந்நிலையிலேயே பௌத்தசாசன அமைச்சில் முக்கிய பதவியினை வகித்த பி.ஏ. சரத்சந்திர, வவுனியா மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார். அந்தவகையில் அவர் தனது கடமைகளை, இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். குறித்த நிகழ்வில் மதகுருமார்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலகத்தின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வவுனியா மாவட்ட புதிய அரசாங்க அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்! Reviewed by Author on August 28, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.