மன்னாரில் 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வீடு வைபவ ரீதியாக உரிமையாளரிடம் கையளிப்பு.
மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 6 லட்சம் ரூபாய் நிதி உதவியுடன், வீட்டு உரிமையாளரின் பங்களிப்புடனும் சிறந்த முறையில் அமைக்கப்பட்ட குறித்த வீடு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14) காலை வைபவ ரீதியாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இதன் போது மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப்,தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முகாமையாளர் எஸ்.யூட், மன்னார் மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் எம்.நோயல் ஜெயச்சந்திரன் , மன்னார் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எல்.ஜே.றொகன் குரூஸ் மற்றும் கிராம அலுவலர் ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக குறித்த வீட்டை திறந்து வைத்து உரிமையாளர்களிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வீடு வைபவ ரீதியாக உரிமையாளரிடம் கையளிப்பு.
Reviewed by Author
on
September 14, 2021
Rating:

No comments:
Post a Comment