அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் வறுமையின் கோர தாண்டவம் பாதுகாப்பான வீடு ஒன்றை அமைக்க உதவி கோரும் குடும்பம்

கொரோனா பெரும் தொற்று,நாடளாவிய முடக்க நிலை,அதிகரித்துவரும் பொருட்களின் விலை உயர்வு இவை எல்லாவற்றையும் கடந்து பல குடும்பங்கள் ஒரு வேலை உணவுக்காக போராடிக்கொண்டிருக்கின்றார்கள்

 பலர் அரசாங்கத்தின் கொடுப்பனவுகளை நம்பியும் இன்னும் சிலர் கடவுளை நம்பியும் ஒவ்வொரு நாளையும் கடந்து செல்கின்றார்கள் இவை எல்லாவற்றையும் கடந்து சொந்த உழைப்பில் கொரோனா ஊரடங்கு ,விலை வாசி ஏற்றம் என அனைத்தையும் கடந்து தனி ஒரு குடும்பமாக மூன்று பிள்ளைகளுடன் போராடி வருகின்றார் றீற்றா கடந்த வருடம் மன்னார் நானாட்டான் பிரதேச செயலக பிரிவை சேர்ந்த அருகம் குன்று பகுதியை சேர்ந்த குடும்பங்களை பற்றிய ஒரு செய்தியை அனைவரும் கடந்து சென்றிருப்போம் 

 உள்ளூர் மற்றும் புலம் பெயர் உறவுகளின் உதவியால் அப்பகுதியை சேர்ந்த சில குடும்பங்களுக்கு அத்தியாவசியமான சில உதவிகள் செய்து கொடுக்கப்பட்டன அக் குடும்பங்களில் பலர் அவ் உதவிகளை கொண்டு முன்னேற்ற பாதையில் பயணித்து கொண்டிருக்கின்றனர் அவர்களில் ஒரு குடும்பமே இவர்கள் வருமையின் கோரப்பிடியில் இருந்து மெல்ல துளிர் கொள்ளத்துடிக்கும் இந்த குடும்பத்தினர் கடந்த வருடம் தங்களுக்கு கிடைத்தை உதவிகளை பயன்படுத்தி தங்களுடைய சொந்த நிலத்தில் பல்வேறு பயிற்செய்கை மற்றும் தோட்ட செய்கையில் ஈடுபட்டு பயணடைந்து இக் கொரோனா இரண்டாவது அலையில் நீந்தி கொண்டிருக்கின்றார்கள்

 ஆனாலும் மூன்று குழந்தைகளுடன் ஒழுங்கற்ற பாதுகாப்பற்ற கொட்டில் வீட்டிளேயே அவர்களின் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றது உணவு தேவை அனைத்து சொந்த உழைப்பில் உற்பத்தி செய்தாலும் மழை காற்றில் தாக்கு பிடிக்க கூடிய தங்குமிடம் இன்றி கைக்குழந்தையுடன் தவிக்கின்றனர் இக் குடும்பத்தினர் வீட்டு வளவை சூழவே நெற்செய்கை தோட்ட செய்கையை மேற்கொள்வதால் அக்குடிசை வீட்டுக்குள்ளே விசப் பாம்புகளும் பூச்சிகளும் தஞ்சம் புகுகின்றன 

இவை எல்லாவற்றையும் கடந்து செல்லும் இக் குடும்பத்தின் தோட்ட செய்கைக்காக நீர் பாச்ச போதிய மின் பிறப்பாகி இன்மையால் பல தோட்டப்பயிர் செய்கைகள் பயனற்று கருகி போய் உள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது அரசாங்கத்தின் உதவிகளையும் புலம் பெயர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியை பெற்று அவற்றை வீண் விரயமாக்கும் எத்தனையோ பேரில் தமக்கான வாழ்வாதாரைத்தை வழங்கியவர்களின் பணத்தை சரியாக பயண்படுத்தி முன்னேரிய இக் குடும்பத்தினரின் எதிர்காலம் அவர்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்க எம்மால் முடிந்ததை செய்வோம்



மன்னாரில் வறுமையின் கோர தாண்டவம் பாதுகாப்பான வீடு ஒன்றை அமைக்க உதவி கோரும் குடும்பம் Reviewed by Author on September 12, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.