-

யாழில் மேலும் நால்வர் கொரோனாவுக்குப் பலி

யாழ். மாவட்டத்தில் மேலும் 4 பேர் கொவிட் -19 தொற்றால் உயிரிழந்தனர் என்று நேற்று இரவு 10 மணி வரையான தகவல்கள் தெரிவித்தன. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பருத்தித்துறையைச் சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்தார். 

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்ற கைதடி முதியோர் இல்லத்தைச் சேர்ந்த 81 வயது டைய ஆண் ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற கோண்டாவிலைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவரும் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்தனர். இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 307ஆக உயர்வடைந்துள்ளது.

யாழில் மேலும் நால்வர் கொரோனாவுக்குப் பலி Reviewed by Author on September 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.