வடமராட்சியில் மீட்கப்பட்ட சடலங்களில் ஒன்று 'சின்பன்சி' குரங்கினுடையதா?
முதலாவதாக கரை ஒதுங்கிய சடலத்தை பொலிஸார் புதைத்துள்ளனரா? என்று சந்தேகம் எழுந்துள்ளது. குறித்த சடலம் சிம்பன்சி குரங்கின் சடலம் என அந்தச் சடலம் புதைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடமராட்சி கடற்பரப்பில் கடந்த வாரம் வெவ்வேறு தினங்களில் 5 சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன என்றும் அவை பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவை தொடர்பில் தகவல்கள் கிடைக்காமை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கடந்த நவம்பர் 16ஆம் திகதி மணற்காடு கடற்கரையில் மீட்கப்பட்ட சடலம் நீதிமன்றுக்கு தகவல் வழங்கப்படாமல் புதைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விலங்குகளின் சடலம் மீட்கப்பட்டாலும் நீதிவானின் அனுமதியுடன் கால்நடை வைத்திய அதிகாரியின் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வடமராட்சியில் மீட்கப்பட்ட சடலங்களில் ஒன்று 'சின்பன்சி' குரங்கினுடையதா?
Reviewed by Author
on
December 08, 2021
Rating:
No comments:
Post a Comment