ஊரடங்கு உத்தரவால் முடங்கியது முல்லைத்தீவு ! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் வற்றாப்பளை சந்தியில் உள்ள வீதி தடையில் வீதியால் செல்லும் அனைவரும் காவல் துறையினர் மற்றும் இராணுவத்தினரால் துருவித்துருவி விசாரணை செய்யப்பட்டு வருவதோடு அவர்களை பதிவு செய்வதனையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
இதேவேளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வீதி தடைகளில் சோதனை நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுவதோடு அத்தியாவசிய சேவைகளுக்காக பயணிப்பவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது இதேவேளை நேற்று மாலை திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக மரக்கறி வியாபாரிகள் ,பழக்கடை உயிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாரிய நட்டங்களை எதிர்கொண்டுள்ளனர்
ஊரடங்கு உத்தரவால் முடங்கியது முல்லைத்தீவு ! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Reviewed by Author
on
April 03, 2022
Rating:

No comments:
Post a Comment