கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முயன்ற 67 பேர் திருமலையில் கைது
இலங்கை கடற்படைக் குழு ஒன்று நிலாவெளி பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்களில் 7 பெண்களும் 3 குழந்தைகளும் அடங்குவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப் பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை, இரத்தினபுரி, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய இடங்களைச் சேர்ந்த வர்கள் என இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முயன்ற 67 பேர் திருமலையில் கைது
Reviewed by Author
on
May 24, 2022
Rating:

No comments:
Post a Comment