அண்மைய செய்திகள்

recent
-

உடபுஸ்ஸலாவையில் விபத்து – 27 பேர் காயம் – அறுவரின் நிலைமை கவலைக்கிடம்

உடபுஸ்ஸலாவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வலப்பனை பிரதேச வைத்தியசாலை மற்றும் ரிக்கிலகஸ்கட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று(30) காலை வலப்பனை – மஹவ பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பிலிருந்து உடபுஸ்ஸலாவையில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, மீண்டும் மட்டக்களப்பு நோக்கி திரும்பியவர்களே இந்த விபத்துக்கு முகம் கொடுத்துள்ளனர். 

 காயமடைந்தவர்களில் அறுவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


உடபுஸ்ஸலாவையில் விபத்து – 27 பேர் காயம் – அறுவரின் நிலைமை கவலைக்கிடம் Reviewed by Author on August 30, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.