அண்மைய செய்திகள்

recent
-

நொச்சிக்குளம் கிராம மக்களின் அவல நிலை.

மன்னார் நொச்சிக்குளம் இரட்டை படுகொலை தொடர்பாக சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட 20 சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,குறித்த சந்தேக நபர்களின் குடும்பங்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட நொச்சிக்குளம் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். -மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதி இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் குறித்த கிராமத்தில் உள்ள பல குடும்பங்கள் அச்ச சூழ்நிலையில் வேறு இடங்களுக்கு சென்று வாழ்ந்து வந்தனர். 

எனினும் சந்தேக நபர்களை போலீசார் தொடர்ந்தும் தேடி வந்த நிலையில்,சந்தேக நபர்கள் கட்டம் கட்டமாக சட்டத்தரணி ஊடாக பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர். -இவ்வாறு நொச்சி குளத்தைச் சேர்ந்த இளைஞர்கள்,குடும்பத்தலைவர்கள் என 20 பேர் வரை சரணடைந்து தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். -இந்த நிலையில்,குறித்த 20 நபர்களுடைய குடும்பங்களும் தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. -அன்றாடம் உழைத்து குடும்பத்தை காத்து வரும் குடும்பத் தலைவர்களும் தற்போது விளக்கமறியலில் உள்ளமையினால் அக்குடும்பங்கள் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள 20 சந்தேக நபர்களும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை (30-09-2022) விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



நொச்சிக்குளம் கிராம மக்களின் அவல நிலை. Reviewed by Author on September 23, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.