அண்மைய செய்திகள்

recent
-

ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மீண்டும் விமான சேவை !

ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவை ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கைக்கு தடையில்லா விமான சேவையை மேற்கொள்ளவத்தை உறுதி செய்யமுடியாது என கூறி சில மாதங்களுக்கு முன்பு, ரஷ்ய விமான நிறுவனமான ஏரோஃப்ளோட் நிறுவனம் சேவையை நிறுத்தியது.

 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் திகதி இலங்கைக்கான தனது சேவைகளை தொடங்கி, 8 மாதங்களுக்குப் பிறகு குறித்த விமான நிறுவனம் தனது விமான சேவைகளை நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான கடன் தொடர்பாக ரஷ்ய அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.


ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மீண்டும் விமான சேவை ! Reviewed by Author on September 18, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.