அண்மைய செய்திகள்

recent
-

தொல்பொருள் திணைக்களத்தினரின் அடாவடி சம்பந்தப்பட்ட அமைச்சரை நேரில் சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் மற்றும் ஸ்ரீதரன்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலை பகுதியில் அமைந்துள்ள தண்ணிமுறிப்பு கிராமத்தைச் சேர்ந்த தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்கள் கடந்த வாரம் முதல் தொல்பொருள் திணைக்களத்தினர் அபகரித்து வந்த நிலையில் அப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு அமைப்பாக கடந்த வாரம் நேரடியாக அவ்விடத்திற்கு சென்று பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தொல்பொருள் திணைக்களத்தினரின் அடாவடியான செயற்பாடுகளை பார்வையிட்டிருந்தார்.

 இந்த நிலையில் இன்றைய தினம் (20) சம்பந்தப்பட்ட அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க வை நேரில் சந்தித்து இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கூறியதுடன் சம்பந்தப்பட்ட அமைச்சர் உடனடியாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளரை தொடர்பு கொண்டு உடனடியாக இவ் அளவீடுகளை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார். சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் சிவஞானம் ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தொல்பொருள் திணைக்களத்தினரின் அடாவடி சம்பந்தப்பட்ட அமைச்சரை நேரில் சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் மற்றும் ஸ்ரீதரன்! Reviewed by Author on September 20, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.