100 ரூபாவிற்காக சிறுவனை தாக்கிய நபர் தப்பி ஓட்டம் : 7 மணிநேர சத்திரசிகிச்சையின் பின் உயிர் பிழைத்த சிறுவன்
அதன்போது, வீதியில் நின்றிருந்த நபர் ஒருவர் சிறுவனிடம் இருந்த 100 ரூபா பணத்தை பெற்றுக் கொள்வதற்காக அவரை கூரிய ஆயுதங்களால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
படுகாயமடைந்த சிறுவன் மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இரவு 8.10 அளவில் சத்திரசிகிச்சை ஆரம்பிக்கப்பட்டதாகவும், அதிகாலை 3 மணிவரை சிகிச்சை தொடர்ந்ததாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.
சிறுவனின் தோற்பட்டை மற்றும் மார்புப் பகுதிகளில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாகவும், ஒரு பகுதியில் கூரிய ஆயுதம் நுரையீரல் வரை ஊடுருவியிருந்ததாகவும், வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
தாக்குதல் நடத்திய நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர் மனநோயினால் பாதிக்கப்பட்டவரென தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
100 ரூபாவிற்காக சிறுவனை தாக்கிய நபர் தப்பி ஓட்டம் : 7 மணிநேர சத்திரசிகிச்சையின் பின் உயிர் பிழைத்த சிறுவன்
Reviewed by Author
on
September 01, 2022
Rating:
.jpg)
No comments:
Post a Comment