அண்மைய செய்திகள்

recent
-

நிலக்கரி கிடைக்காவிட்டால் மின்வெட்டு அதிகரிக்கும்

இலங்கைக்கு நிலக்கரி வழங்குவதற்கான இருப்பை அதன் விநியோகதத்தர்கள் வெளிப்படுத்தியுள்ளதாக லங்கா கோல் (பிரைவேட்) லிமிடெட் தெரிவித்துள்ளது. நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு தற்போதுள்ள டொலர் நெருக்கடி தடையாக உள்ளதாக நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி அனல்மின் நிலையத்தின் மூன்று அலகுகளையும் இயக்குவதற்கு நாளாந்தம் 7,500 மெட்ரிக் தொன் நிலக்கரி தேவைப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 போதியளவு நிலக்கரி கையிருப்பு கிடைக்காவிட்டால் நாளாந்த மின்வெட்டு காலம் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். பழுதடைந்துள்ள நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மின்பிறப்பாக்கி இரண்டு தேசிய மின்கட்டமைப்பில் இணைக்க இன்னும் ஒரு மாத காலம் ஆகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நிலக்கரி கிடைக்காவிட்டால் மின்வெட்டு அதிகரிக்கும் Reviewed by Author on September 16, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.