அண்மைய செய்திகள்

recent
-

பிரிட்டன் மன்னரானார் ராணி எலிசபெத்தின் மகன் சார்லஸ்!

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமான நிலையில், ராணியின் மூத்த மகனும் வாரிசுமான சார்லஸ் பிரித்தானியாவின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ராணியின் மூத்த மகனும் வாரிசுமான சார்லஸ், முன்னாள் வேல்ஸ் இளவரசர், ஐக்கிய இராச்சியம் மற்றும் 14 காமன்வெல்த் நாடுகளின் மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 இதேவேளை, எதிர்வரும் நாட்களில் என்ன நடக்கும் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், மகாராணிக்கு முழு அரச மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கும் வகையில் ராணியின் உடல் வைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் இறுதி திட்டங்களுக்கு மன்னர் கையெழுத்திடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் மன்னரானார் ராணி எலிசபெத்தின் மகன் சார்லஸ்! Reviewed by Author on September 09, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.