இலங்கையில் வாகன உதிரி பாகங்களின் விலை உயர்வு !
இந்நிலையில் 4000 முதல் 5000 ரூபா வரையில் இருந்த மோட்டார் சைக்கிள் சில்லுகள் தற்போது 12,000 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. 3600 ரூபாவாக இருந்த மோட்டார் சைக்கிள் பேட்டரி 9000 ரூபாவை தாண்டியுள்ளதாகவும், 450 ரூபாவாக இருந்த பிரேக் லைனர் 1200 ரூபாவாகவும், 4000 ரூபாவாக இருந்த செயின் ஸ்ப்ராக்கெட் 9000 ரூபாவாகவும்,800 ரூபாய்க்கு விற்கப்பட்ட மசகு எண்ணெய் 1600 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகின்றது. இதேவேளை, 35,000 ரூபாவாக இருந்த பேருந்தின் சில்லுகள் 75,000 ரூபாவாகவும், 24,000 ரூபாவாக இருந்த பேட்டரிகள் 70,000 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றது. வாகன உதிரிபாகங்கள் இறக்குமதி செய்வதில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் தட்டுப்பாடு காரணமாகவே இவ்வாறு உதிரி பாகங்களின் விலை அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் வாகன உதிரி பாகங்களின் விலை உயர்வு !
Reviewed by Author
on
September 08, 2022
Rating:
Reviewed by Author
on
September 08, 2022
Rating:


No comments:
Post a Comment