அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதேச செயலக பிரிவில் உள்ள வசந்தபுரம் கிராமத்தில் மக்கள் போராட்டம் முன்னெடுப்பு.

வடக்கு- கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 85 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று திங்கட்கிழமை(24) காலை 10.30 மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, பேசாலை வசந்தபுரம் கிராமத்தில் இடம் பெற்றது. குறித்த 100 நாள் செயல் முனைவின் 85 ஆம் நாள் போராட்டத்தில் வசந்தபுரம் கிராமத்தில் உள்ள பெண்கள், ஆண்கள்,இளைஞர்கள், மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர். 'வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்' ' நாங்கள் நாட்டை துண்டாட வோ' தனியரசு கேட்கவில்லை.

இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வை கேட்கிறோம் ' ' வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும் ' ' 13வது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்க துக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்போம்' எங்கள் நிலம் எமக்கு வேண்டும்,நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை,ஒன்று கூடுவது எங்கள் உரிமை,மத வழிபாடு எங்கள் சுதந்திரம், எமது மத தளங்களின் புனிதத்தை கொச்சை படுத்தாதே,இந்து மத ஆலயங்களின் இடங்களை திட்டமிட்டு சுபீகரிக்காதே என பல கோரிக்கைகளை முன் வைத்தனர்.







மன்னார் பிரதேச செயலக பிரிவில் உள்ள வசந்தபுரம் கிராமத்தில் மக்கள் போராட்டம் முன்னெடுப்பு. Reviewed by Author on October 24, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.