அண்மைய செய்திகள்

recent
-

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்துக்கு அமுலில் இருக்கும். இன்று (13) பிற்பகல் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, புளத்சிங்கள, வலல்லவிட்ட, பாலிந்த நுவர மற்றும் தொடங்கொட ஆகிய பகுதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுகின்றது. மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, குருவிட்ட, இரத்தினபுரி, எலபாத, அயகம, கிரி எல்ல, பெல்மதுளை, கலவான, நிவித்திகல ஆகிய பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை Reviewed by Author on October 13, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.