கல்முனையில் கடலுக்கு சென்ற மீனவர்களை பத்து நாட்களாக காணவில்லை!
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு மீனவ சங்கத்தினர் கொண்டு வந்திருந்த போதிலும் தேடுதல் நடவடிக்கை மந்த கதியில் இடம்பெற்று வருவதாக காணாமல் போன படகு உரிமையாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பொலிஸ், கடற்படை உள்ளிட்ட தரப்பினருக்கு மீனவ சங்கம் இதுதொடர்பாக அறிவித்துள்ள போதும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், தற்போது, மீனவ சங்கங்கள் தேடுதல் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளன.
இதனிடையே, காணாமல் போன நான்கு மீனவர்களை தேடும் நடவடிக்கையில் மீன்பிடி அமைச்சு மற்றும் திணைக்கள அதிகாரிகள், இலங்கை கடற்படை, இந்திய கரையோர காவல்படை என்பன ஈடுபட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடி உள்ளதாக கல்முனை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்
.
.
கல்முனையில் கடலுக்கு சென்ற மீனவர்களை பத்து நாட்களாக காணவில்லை!
Reviewed by Author
on
October 06, 2022
Rating:

No comments:
Post a Comment