அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் “சர்வம் அறக்கட்டளை கனடா” ஊடாக பாடசாலை மாணவிகளுக்கு ஆடைகள் வழங்கி வைப்பு

மன்னார் மாவட்டத்தில் உள்ள பின் தங்கிய கிராமங்களில் ஒன்றான மடுக்கரை கிராமத்தில் வறுமையின் மத்தியில் கல்வி பயிலும் மாணவிகளின் தற்சுகாதாரத்தை மேம்படுத்துவதன் ஊடாக அவர்களின் கல்வி நடவடிக்கையை ஊக்கப்படுத்தல் எனும் தொணிப்பொருளில் அவர்களுக்கான பிரத்தியேக ஆடை வழங்கும் நிகழ்வு சர்வம் அறக்கட்டளை கனடா ஊடாக இடம் பெற்றுள்ளது

 பாடசாலையினால் இலவசமாக வழங்கும் சீருடைகள் தவிர்ந்த மாணவிகளுக்கான பிரத்தியோக ஆடைகள் மேற்படி சர்வம் அறக்கட்டளையின் நிதி அனுசரணையில் வெளிநாட்டில் வசிக்கும் புலம் பெயர் உறவுகளின் பங்களிப்பில் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது மன்/மடுக்கரை பாடசாலையில் கல்விபயிலும் 110 மாணவிகளுக்கு மேற்படி ஆடைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது குறித்த நிகழ்வில் சர்வம் அறக்கட்டளையின் மன்னார் பிரதிநிதிகள் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு மாணவிகளுக்கான ஆடைகளை வழங்கி வைத்தனர் “சர்வம் அறக்கட்டளை கனடா” ஊடாக மன்னார்,யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள வறுமைகோட்டுக்கு உட்பட்ட பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு தொடர்சியாக தற்சுகாதார மேம்பாட்டுக்கான உதவிகள் வழங்கி வைக்கப்படுகின்றமை குறிப்பிடதக்கது







மன்னாரில் “சர்வம் அறக்கட்டளை கனடா” ஊடாக பாடசாலை மாணவிகளுக்கு ஆடைகள் வழங்கி வைப்பு Reviewed by Author on October 25, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.