தீபாவளி முற்பணமாக 15,000 ஆயிரம் ரூபாய் தருவதாக ஏமாற்றம் – தொழிலாளர்கள் போராட்டம்
அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட அக்கரப்பத்தனை வேவர்லி, மோனிங்டன், போட்மோர், ஆடலி உள்ளிட்ட தோட்ட தொழிலாளர்கள் இன்று (வியாழக்கிழமை) கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தீபாவளி முற்பணம் 15,000 ஆயிரம் ரூபாய் தருவதாக பெருந்தோட்ட கம்பனிகள் அறிவித்திருந்த போதிலும் அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட அக்கரப்பத்தனை வேவர்லி, மோனிங்டன், போட்மோர், ஆடலி உள்ளிட்ட தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு 5000 ரூபாய் அல்லது பத்தாயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் முற்பணம் தருவதாக அறிவித்ததை அடுத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், தாம் முறையாக வேலை செய்ததாகவும், தற்போது தமக்கு வழங்கப்படும் முற்பணம் மாத சம்பளத்தில் அளவிடப்படுவதோடு 15 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியிருந்த போதிலும் இதனை தோட்ட நிர்வாகம் வழங்க முடியாது என கூறுவதனை எவ்விதத்தில் ஏற்றுக்கொள்ள முடியும்? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தீபாவளி முற்பணத்தை முறையாக வழங்க வேண்டும், இல்லாவிட்டால் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கப்போவதாகவும் தொழிலாளர்கள் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர்.
தீபாவளி முற்பணமாக 15,000 ஆயிரம் ரூபாய் தருவதாக ஏமாற்றம் – தொழிலாளர்கள் போராட்டம்
Reviewed by Author
on
October 20, 2022
Rating:

No comments:
Post a Comment