கந்தகாடு மோதல் - 13 பேரை காணவில்லை
மோதலின் பின்னர் இதுவரை 301 கைதிகள் புனர்வாழ்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.
மோதலில் ஈடுபட்ட 215 கைதிகள் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மோதலின் போது தப்பியோடிய 14 கைதிகள் புலதிசிபுர மற்றும் சேருநுவர பொலிஸ் நிலையங்களில் இருப்பதாகவும், காயமடைந்த 04 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பிரிகேடியர் ரவி ஹேரத் மேலும் குறிப்பிட்டார்.
எனினும், தப்பியோடிய 13 கைதிகள் இன்னும் சரணடையவில்லை.
கந்தகாடு மோதல் - 13 பேரை காணவில்லை
Reviewed by Author
on
November 09, 2022
Rating:
Reviewed by Author
on
November 09, 2022
Rating:


No comments:
Post a Comment