அண்மைய செய்திகள்

  
-

நச்சுப் புகையை சுவாசித்ததால் 40 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!


பாணந்துறையில் பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் நச்சுப் புகையை சுவாசித்ததால் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பாணந்துறை நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும் 50க்கும் மேற்பட்ட மாணவர்களே பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 வீடு அல்லது பாடசாலையைச் சுற்றியுள்ள இடங்களில் சில எரிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், இதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தினால் இம்மாணவர்கள் சுவாசிப்பதில் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து, மாணவர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்

நச்சுப் புகையை சுவாசித்ததால் 40 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி! Reviewed by Author on November 02, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.