மன்னார் மாவட்டத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி அமரர் ஜோண் தாஸனின் பெயர் வீதிக்கு சூட்டப்பட்டு திறந்து வைப்பு.
மக்களின் கோரிக்கைக்கு அமைவாகவும்,மன்னார் நகரசபை அமர்வில் உறுப்பினர்களின் தீர்மானத்திற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தின் மூத்த சட்டத்தரணியும்,சமூக சேவையாளருமான அமரத்துவம் அடைந்த சட்டத்தரணி அமரர் அம்புரோஸ் சைமன் ஜோண்தாசன் என்பவரின் பெயரில் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, முதலாம் குறுக்குத் தெருவிற்கு 'அமரர் அம்புரோஸ் சைமன் ஜோண் தாசன் ' என பெயர் சூட்டப்பட்டு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
-குறித்த நிகழ்வில் மன்னார் நகர சபையின் தலைவர் ஞா.அன்ரனி டேவிட்சன்,நகர சபையின் செயலாளர்,உறுப்பினர்கள் மற்றும் சட்டத்தரணிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
-குறித்த வீதியின் பெயர் பலகையை அமரர் அம்புரோஸ் சைமன் ஜோன் தாசன் அவர்களின் புதல்வன் சிரேஷ்ட சட்டத்தரணி ஜோண் தாசன் துசித் வைபவ ரீதியாக திரை நீக்கம் செய்துவைத்தமை குறிப்பிடத்தக்கது
மன்னார் மாவட்டத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி அமரர் ஜோண் தாஸனின் பெயர் வீதிக்கு சூட்டப்பட்டு திறந்து வைப்பு.
Reviewed by Author
on
November 01, 2022
Rating:

No comments:
Post a Comment