அண்மைய செய்திகள்

recent
-

அகில இலங்கை சமாதான நீதவானாக மன்னாரை சேர்ந்த முகம்மது இப்ராஹிம் அப்துல் ரஷாக் சத்தியப்பிரமாணம்

மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த முகம்மது இப்ராஹிம் அப்துல் ரஷாக் அகில இலங்கை சமாதான நீதவானாக மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இவர் மன்னார் புதுக்குடியிருப்பை பிறப்பிடமாக, கொண்டவர். மன்/புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியையும், மன்/எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியில் உயர் கல்வியையும் தொடர்ந்தார்.

 இவர் PSL நிறுவனத்தில் மாவட்ட இணைப்பாளராக கடமையாற்றியதுடன் தற்போது volunteers for LIFE நிறுவனத்தின் இணைப்பாளராக செயற்பட்டு வருகின்றார் அதே நேரம் இவர் பல தன்னார்வ தொண்டு நிறுவனதுடன் இணைந்து இளைஞர்களுக்கான பல செயற்திட்டங்களை முன்னெடுத்து வருவதுடன் ,மாவட்ட மத நல்லிணக்க குழு செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு வருகின்றார் தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்தில் சிறந்த சமூகசேவையாளராகவும் திகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







அகில இலங்கை சமாதான நீதவானாக மன்னாரை சேர்ந்த முகம்மது இப்ராஹிம் அப்துல் ரஷாக் சத்தியப்பிரமாணம் Reviewed by Author on December 17, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.