வறிய குடும்பங்களை இலக்கு வைத்து சிறுநீரக கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது
கொழும்பு 15 – கஜீமா வத்தை பகுதியைச் சேர்ந்த 41 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுநீரகங்களை பணத்திற்காக வழங்கும் நபர்கள் மற்றும் அவற்றை பெற்றுக்கொள்ளும் தரப்பினர் ஆகியோருக்கு இடையில் சந்தேகநபர் தரகராக செயற்பட்டுள்ளதாகவும் தரகுப் பணத்திற்கு மேலதிகமாக சிறுநீரகத்திற்காக வழங்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை மோசடி செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை இன்று(06) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
வறிய குடும்பங்களை இலக்கு வைத்து சிறுநீரக கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது
Reviewed by Author
on
December 06, 2022
Rating:

No comments:
Post a Comment