IMFஇன் அதிரடி முடிவால் கதி கலங்கிய சீனா - இலங்கைக்கு உதவுவதாக அறிவிப்பு
இலங்கை வழங்கவுள்ள கடனுக்கான கால எல்லையை நீடிப்பதாக சீனா இன்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி இலங்கைக்கு கடன் நீடிப்பை வழங்கியுள்ளதாக சீனாவின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் முதற்கட்ட கடனுதவியை வழங்க சீனாவின் கடன் உத்தரவாதம் அவசியம் என வலியுறுத்தப்பட்ட நிலையில், தொடர்ந்தும் பின்னடிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சீனாவின் கடன் மறுசீரமைப்பு ஆதரவு இல்லாமல்,இலங்கைக்கான கடனை வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதனையடுத்து 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் செலுத்த வேண்டிய கடனை நிறுத்துவதற்கான கடிதத்தை சீனா ஏற்கனவே இலங்கைக்கு வழங்கியுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
இந்த காலகட்டத்தில், சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் கடன் அசல் மற்றும் வட்டியை, இலங்கை திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை, இது குறுகிய கால கடன் அழுத்தத்தை குறைக்க இலங்கைக்கு உதவுகிறது என்றும் சீனாவின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment