மது அருந்தியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் நபர் ஒருவர் தடியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பெல்மதுல்ல பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபராவார்.
இது தொடர்பாக பொலிஸார் நடத்திய விசாரணையில், கொலையுண்ட நபர் கடந்த 10ஆம் திகதி இரவு தனது வீட்டில் வேறு ஒருவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.
இதன்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்தே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment