கனரக வாகனமொன்றுடன் வான் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு!
திருகோணமலை கண்டி பிரதான வீதியில் கனரக வாகனமொன்றுடன் வான் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் இன்று காலை அலுத்ஒயா, சிங்ககம பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பிலிருந்து கிண்ணியாவுக்குச் சென்ற வான் ஒன்றும், திருகோணமலையிலிருந்து கொழும்புக்குச் சீமெந்து ஏற்றிச்சென்ற கனரக வாகனமொன்றும் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் கிண்ணியா பகுதியைச் 45 மற்றும் 47 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வானில் பயணித்த மற்றைய நபர் பலத்த காயங்களுடன் அதிதீவிர சிகிச்சை பிரிவில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரன பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
June 06, 2023
Rating:


No comments:
Post a Comment