இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவுதினம் அனுஷ்டிப்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவுதினம் அனுஷ்டிப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது
பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக்கம்பத்தில் மாணவர்களால் கறுப்பு கொடியேற்றப்பட்டு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
இதனையடுத்து பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் கறுப்பு ஜூலை நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் ஈகைச் சுடரேற்றப்பட்டதோடு மலரஞ்சலியுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
1983 கறுப்பு ஜூலை வாரத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது. நினைவேந்தலில் பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவுதினம் அனுஷ்டிப்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவுதினம் அனுஷ்டிப்பு
Reviewed by Author
on
July 23, 2023
Rating:

No comments:
Post a Comment