வவுனியாவில் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம்
வவுனியாவில் தர்மலிங்கம் வீதியிலுள்ள சோமசுந்தரப்புலவர் நினைவுச்சிலையடியில் இன்று ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.
வவுனியா மாநகரசபை மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் நினைவுத்தூபியில் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தலைவர் ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் அன்னாரின் நினைவுத்தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவுப் பேருரையும் நிகழ்த்தப்பட்டது.
இந் நிகழ்வில் மாநகரசபை செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஜி. ரி. லிங்கநாதன், முன்னாள் நகரசபை தலைவர் இ. கௌதமன், முன்னாள் நகரசபை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பாடசாலை மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது ஆடிப்பிறப்பை முன்னிட்டு கூழ், கொழுக்கட்டையும் கலந்துகொண்டவர்களுக்கு வழங்கப்பட்டன.
Reviewed by Author
on
July 17, 2023
Rating:


No comments:
Post a Comment