அண்மைய செய்திகள்

recent
-

சுகாதார அமைச்சரின் ஊழலே உயிரிழப்பிற்கு காரணம் : சாணக்கியன் குற்றச்சாட்டு!

 சுகாதார அமைச்சரின் ஊழல் காரணமாகவே நூற்றுக்கணக்கானோர் நாட்டில் இறந்து கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்


மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் முன்னால் இன்று டெங்கு ஒழிப்பு ஊழியர்களை நிரந்தர நியமனம் செய்யுமாறு கோரி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சுகாதார அமைச்சரின் ஊழல் காரணமாக தரம் குறைந்த ஊசிகளை கொண்டுவந்த விடயங்களால் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள ஆயிரம் டெங்கு ஒழிப்பு உதவியாளரர்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேல் தங்களை நிரந்தரமாக்குமாறு கோரி வருகின்றனர்

பேராதனை வைத்தியசாலை இலங்கையில் இருக்கும் 2 வது வைத்தியசாலையாகும். அந்த வைத்தியசாலையில் 10 எம்.எம் ஊசி இல்லை என்றால் எமது கிராமப்புற வைத்தியசாலைகளில் அந்த ஊசி இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.

அமைச்சரின் ஊழலால் நாற்றுக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர் ஆனால் இந்த டெங்கு ஊழியர்கள்; மக்களை காப்பாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். ஜனாதிபதி பிரதமராக இருந்த காலப்பகுதியில் தான் இவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது.

அவர் இன்று மொட்டுகட்சியின் அரசியல் கைதியாக இருந்தாலும் கூட நீதியை நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கு பொறுப்பு இருக்கின்றது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


சுகாதார அமைச்சரின் ஊழலே உயிரிழப்பிற்கு காரணம் : சாணக்கியன் குற்றச்சாட்டு! Reviewed by Author on July 14, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.