அண்மைய செய்திகள்

recent
-

யானை தாக்கி 12 வயது பாடசாலை மாணவன் பலி

 பனாமுர பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பனாமுர காவன்திஸ்ஸ ரஜமஹா விகாரையில் இன்று நடைபெறவிருந்த பெரஹரவிற்காக அழைத்து வரப்பட்ட யானையொன்று கட்டி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்ற போதே இந்த பாடசாலை மாணவன் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த பாடசாலை மாணவர் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

எம்பிலிபிட்டிய கல்ஹமுன பிரதேசத்தில் வசிக்கும் 12 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் யானைக்கு பொறுப்பான யானை பாகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பனாமுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




யானை தாக்கி 12 வயது பாடசாலை மாணவன் பலி Reviewed by Author on September 15, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.