அண்மைய செய்திகள்

recent
-

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் -அல்-அஸ்ஹர் முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சி

 


மன்னார் -அல்-அஸ்ஹர் முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சி நிகழ்வு இன்று சனிக்கிழமை(9) காலை உப்புக்குளம் பொது மண்டபத்தில் இடம்பெற்றது.

முன்பள்ளி ஆசிரியர் ஆர்.எம்.பரீதா தலைமையில் இடம்பெற்ற குறித்த கண்காட்சி நிகழ்வில் முன்னாள் மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நகுசீன்,உப்புக்குளம் தெற்கு கிராம அலுவலர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்,அபிவிருத்தி உத்தியோகத்தர்,உப்புக்குளம் பள்ளிவாசல் செயலாளர்,உள்ளடங்களாக முன்பள்ளி சிறார்கள்,பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது முன்பள்ளி சிறார்களினால் உருவாக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டதோடு,தெரிவு செய்யப்பட்ட மூவருக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.











சிறப்பாக இடம் பெற்ற மன்னார் -அல்-அஸ்ஹர் முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சி Reviewed by Author on September 09, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.