அண்மைய செய்திகள்

recent
-

நுவரெலியாவில் கணவனை கொலை செய்த மனைவி

 நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஜிதபுர பகுதியில் நேற்று (23) இரவு கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மனைவி கணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

மகஸ்தோட்ட, விஜிதபுர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இறந்தவர் வீட்டில் குடிபோதையில் இருந்ததாகவும், பணி முடிந்து இரவு மனைவி வீடு திரும்பியதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அங்கு இறந்தவர் தனது மனைவி தாக்கிய நிலையில் பொறுமையை இழந்து மனைவி அவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்த நிலையில், நீதவான் மற்றும் பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.

32 வயதுடைய சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



நுவரெலியாவில் கணவனை கொலை செய்த மனைவி Reviewed by Author on September 24, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.