தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்கள் மன்னார் பொலிஸாரிடம் கையளிப்பு.
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட படகுகளுடன் 15 இந்திய மீனவர்கள் இன்று (15) மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் ஊடாக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்
இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்கள் நேற்று சனிக்கிழமை (14) மாலை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனவர்களே நேற்றைய தினம் 2 டோலர் படகுகளில் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் நேற்று சனிக்கிழமை (14) மாலை தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் இன்று (15) ஞாயிற்றுக்கிழமை காலை மலேரியா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கடற்படையின் ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் மீனவர்கள் அனைவரும் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளால் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் திங்கட்கிழமை (16) அனைத்து மீனவர்களும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்கள் மன்னார் பொலிஸாரிடம் கையளிப்பு.
Reviewed by Author
on
October 16, 2023
Rating:

No comments:
Post a Comment