மூங்கிலாறு பகுதியில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களிலும் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன
அந்த வகையில் மூங்கிலாறு பகுதியில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மூங்கிலாறு,வள்ளுவர் புரம், தேராவில், இளங்கோபுரம், மாணிக்கபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாவீரர்களுடைய பெற்றோர்களுக்கான மதிப்பளிவு நிகழ்வு ஒன்று நேற்று (25) மிகச் சிறப்பாக இடம்பெற்றது
மூங்கிலாறு சிவன் ஆலயத்திற்கு முன்பாக இருந்து மாவீரர்களது பெற்றோர்கள் மங்கள வாத்திய இசையோடு விழா மண்டபம் வரை அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தி மலர்வணக்கம் இடம் பெற்றதை தொடர்ந்து பெற்றோர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம் பெற்றது
நிகழ்வில் சுமார் 200 க்கு மேற்ப்பட்ட மாவீரர்களது பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டனர்
மூங்கிலாறு பகுதியில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு
Reviewed by Author
on
November 26, 2023
Rating:

No comments:
Post a Comment