துவாரகா போன்று காணொளி வெளியிட்டவர்களுக்கு சிக்கல் : இலங்கை அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் எனக் குறிப்பிட்டு பெண்ணொருவர் பேசுவதைப் போன்று காணொளியை வெளியிட்ட நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (21.12.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறியுள்ளார்.
பொது மக்கள் பாதுகாப்பு
அமைச்சு அவதானம்
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் எனத் தெரிவிக்கப்பட்டு பெண்ணொருவர் பேசுவதைப் போன்று வெளியிடப்பட்ட காணொளி தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
குறித்த காணொளி தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அதற்கமைய அந்த காணொளி தயாரிக்கப்பட்ட ஒரு காணொளி என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப்பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு என்பன விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
இவ்வாறான காணொளிகளை வெளியிடுபவர்களை உடனடியாக அடையாளம் காணப்பட்டு அவர்கள் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
Reviewed by வன்னி
on
December 22, 2023
Rating:


No comments:
Post a Comment