ஒட்டுசுட்டானில் விசேட சோதனை நடவடிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் நகர் பகுதியில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடி படையினர் இணைந்து மோப்ப நாய்கள் சகிதம் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையான ‘யுக்திய’வின் ஒரு பகுதியாகவே ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை இன்றையதினம் (14.03.2024) காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிசார் விசேட அதிரடிப் படையினர் மோப்ப நாய் சகிதம் வீதியால் செல்லும் அனைத்து வாகனங்களிலும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Reviewed by Author
on
March 14, 2024
Rating:


No comments:
Post a Comment