அண்மைய செய்திகள்

recent
-

மாங்குளத்துக்கு வருகை தரும் ஜனாதிபதி! கடுமையாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு

 நாட்டினுடைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வடக்குக்கான மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தருகின்றார் 


அந்த வகையில் இன்று(26) காலை முல்லைத்தீவு  புதுக்குடியிருப்பு பகுதியிலே மக்களுக்கான காணி உரிமைப்பத்திரம் வழங்குகின்ற நிகழ்வில் கலந்து கொள்வதோடு காலை 11.30 மணியளவில் மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்ற மருத்துவப் புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் உளநல மேம்பாட்டு நிலையத்தினை திறந்து வைப்பதற்காக வருகை தர இருக்கின்றார்

மாங்குளம் மகா வித்தியாலயா மைதானத்திற்கு உலங்குவானூர்தியிலே வருகை தருகின்ற ரணில் விக்கிரமசிங்க  அவர்கள் மாங்குளம் வைத்தியசாலை கட்டிடத்தை திறந்து வைக்க இருக்கின்ற நிலைமையில் மாங்குளம் நகரம் மற்றும் மாங்குளம் மகா வித்தியாலய மைதானத்தை சூழ்ந்துள்ள பகுதிகளில் பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டிருக்கின்றது 

குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் வடக்கு விஜயத்தின்போது வடக்கில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்ற நிலையில் ஊடக சுதந்திரம் பற்றி பேசுகின்ற ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க அவர்கள் ஊடகவியலாளர்களை அனுமதிக்காமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் பலரும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்



மாங்குளத்துக்கு வருகை தரும் ஜனாதிபதி! கடுமையாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு Reviewed by Author on May 26, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.