மன்னாரில் 'கிளீன் சிறிலங்கா' தேசிய வேலைத்திட்டம் முன்னெடுப்பு.
'சூழல் உணர்வு மிக்க சமூக பொறுப்புணர்வுடன் கூடிய கல்வி சுற்றாடலை நிர்மாணித்தல்' என்ற தொனிப்பொருளில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு நாடு பூராகவும் புதன்கிழமை (9) பாடசாலைகளில் 'கிளீன் சிறிலங்கா' செயற்றிட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்திற்கான நிகழ்வு மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அடம்பன் மத்திய கல்லூரியில் முன்னெடுக்கப்பட்டது.
கல்லூரியின் அதிபர் தலைமையில் 541 படைப்பிரிவின் கட்டளை தளபதி தேசியக் கொடி ஏற்றிய நிலையில்,நிகழ்வு ஆரம்பமானது. மாணவர்களுடன் பெற்றோர்களும் பங்கெடுத்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து பாடசாலை மற்றும் சுற்றுச்சூழல் பகுதிகளில் ராணுவம் இணைந்து சிரமதான பணி யை முன்னெடுத்தனர்.
குறிப்பாக அடங்கு நுளம்பு பெருகும் இடங்களும் அடையாளம் காணப்பட்டு சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சிரமதான நிகழ்வில் மாணவர்கள்,பெற்றோர்,ஆசிரியர்கள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தேசிய வேளைத்திட்டமாக முன்னெடுத்த அமையும் குறிப்பிடத்தக்கது.
.jpg)
No comments:
Post a Comment